பிளாக் டிக்கெட் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் R.ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் கசட தபற. சிம்புதேவன் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஆறு அடிப்படை கதைப்பகுதிகளை இணைத்து ஒரு திரைப்பட அடிப்படையில் உருவாக்கியுள்ள படம்.
ஆறு பகுப்புகளாக கொண்ட இதற்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், சாம் C.S, சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். விஜய் மில்டன், M S பிரபு, பாலசுப்ரமனியம், S R கதிர், R.D .ராஜசேகர் மற்றும் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன், மு.காசி விஸ்வநாதன், ராஜா முஹமது மற்றும் ரூபன் படத்தை தொகுத்துள்ளனர்.
பிரேம்ஜி அமரன் as (பாலா), ரெஜினா கெஸ்ன்ட்ரா as (திரிபுர சண்முக சுந்தரி எனும் திரிஷா), சாந்தனு பாக்யராஜ் as (ஐசக்), சாந்தினி தமிழரசன் as (மனோரஞ்சிதம்), சம்பத் ராஜ் as (அயோத்தி வேதா தாதா), சென்ராயன் as (பூமனி), சுதீப் கிஷன் as (கந்தா), பிரியா பவானி சங்கர் as (கண்மனி), சுப்பு பஞ்சு as (சதுர்வேதி), ராஜ்கமல் as (யூனுஷ்) வித்யா பிரதீப் as (வானதி), ஹரீஸ் கல்யான் as (கிருஷ்ண மூர்த்தி), அர்விந்த் கிருஷ்ணா as (கலீத்) விஜயலக்ஷ்மி as (சுந்தரி), வெங்கட் பிரபு as (சம்யுக்தன்), சிஜா ரோஸ் as (அமுதினி) T.சிவா as (திருமயம் வேலவன்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கசட தபற படம் சோனிலிவ் ஒடிடி தளத்தில் 27.08.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.
கதைக்கரு:
இந்த பூமியில் வாழ்வியல் தத்துவத்தில் சில முகதெரிய நபர்களின் செயல்பாடுகள் வாழ்கையில் பல மாற்றங்களை உருவாக்கும். அந்த நபர்களின் நடவடிக்கை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக நம் வாழ்வியல் சூழலில் தாக்கத்தை உருவாக்க்கும் ஆனால் அந்த கதாப்பாத்திரங்களின் செயல்பாடுகள் ந்ம் பார்வையில் இருந்து நேரடியாக புலப்படாது. அப்படி தொடர்புடைய ஆறு சூழலியலை இணைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளனர்.
சில வாழ்வியலை கதைகள் அப்படியே திரைப்படங்களாக வந்திருக்கின்றது. சில வாழ்வியல் கதை சினிமாத்தனமாக மாற்றப்பட்டு திரைப்படமாக வந்திருக்கின்றது. இந்த கதை வாழ்வியலை சினிமாத்தன அடிப்படையில் சொல்லவிழைந்த ஒரு அடிப்படை.
கதை:
இந்த கதையை ஆறு சூழலியலுக்கேற்ப ஆறு தலைப்புகளில் முறையே கவசம்,, சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்று உருவாகியுள்ளது.
கவசம்: பாலா ஓமேகா மருந்து கம்பெனி குடோனில் வேலை செய்கின்றான் சிறந்த கிருஷ்ண பக்தன், மிகவும் நல்ல குணம் கொண்டவன்.. அங்கே நேர்முகத்தேர்வுக்கு வருகின்றாள் திரிஷா என்கிற திரிபுர சண்முக சுந்தரி. வந்த இடத்தில் தனது மதிப்பென் மற்றும் பிற சான்றிதழ் பைலை விட்டுவிட்டு செல்கின்றாள். அதை பார்த்த பாலா அதை எழுத்துக்கொண்டு பக்கத்து ஹோட்டலில் சாப்பிட சென்ற திரிஷாவிடம் ஒப்படைக்கின்றான். ஆனால் அந்த பைலோடு தவறுதலாக எடுத்து வந்த ஆடிட் மற்றும் கம்பெனி சார்ந்த முக்கிய பைலும் தவறுதலாக இருப்பதை கண்ட திரிஷா அந்த பைலை திரிப்பி கொடுக்கின்றாள். அப்போது ஹோட்டலில் மிஞ்சிய உணவுப்பொருள்களை வாங்கி தெருவில் இருக்கும் நாய்களுக்கு கொடுக்கின்றான். அதை பார்த்த திரிஷாவிற்கு நல்ல அபிப்ராயம் வருகின்றது. இன்னொரு முறை ஒரு குழந்தை மருத்துவ செலவுக்கு தன் கையிலிருந்த பணத்தை கொடுத்து உதவும் போது கொஞ்சம் போதாமல் இருந்த பணத்தை பணத்தை அங்கே வரும் திரிஷாவிடம் வாங்கி கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக தான் வாங்கிவைத்திருந்த மளிகை பொருட்களை கொடுக்கின்றான். குழந்தை உயிரை காப்பாற்றிய அவன் மீது அவளுக்கு மீண்டும் நல்ல எண்ணம் வருகின்றது. வண்டியில் பெட்ரோல் தீர்ந்து இருந்த நடு ரோட்டில் நின்ற திரிஷாவை பார்த்த பாலா உதவ முயலும் போது பெட்ரோல் கிடைக்காமல் போகின்றது, கால் டாக்ஸியும் கிடைக்காத சூழலில் மழையும் பெய்கின்றது. பாலாவின் அறையில் தங்கும் சூழல் உருவாகின்றது. அங்கே நெடு நேரம் பாலாவிடம் பேசிக்கொண்டிக்கும் போது அவன் குணத்தை உணர்ந்து அவன் மீது காதல் கொள்கிறாள்.
பாலாவும் திரிஷாவும் வெளியில் சுற்றும் போது திரிஷாவின் தந்தை பார்த்துவிடுகின்றார். திரிஷா வீட்டில் பிரச்சனையாகிவிடுகின்றது. திரிஷா வீட்டை விட்டு வெளியே வருகின்றாள். அப்போது தன்னுடன் குடோனில் வேலை செய்யும் சம்யுக்தனை பார்க்கின்றான் பாலாவும் திரிஷாவும் திருமணம் செய்து குடியேற ஒரு வீடு பார்த்து தருமாறு கேட்கின்றான். அப்போது தன் கையில் வைத்திருக்கும் ஆடிட் பைலை சம்யுக்தனிடம் கொடுக்கின்றான்.. வீட்டைவிட்டு வந்த திருஷா அதிக நகையையும் அவளுடன் எடுத்து வந்திருந்தாள். சம்யுதன் பார்த்து கொடுத்த வீட்டில் திரிஷா தங்கியிருக்கின்றாள். நாளை இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த சூழலில். பாலா நகையை திருடிவிட்டு திரிஷாவை ஏமாற்றியதை அறிகின்றாள் திருஷா. இதே போல் பாலா பல பெண்களை ஏமாற்றியிருப்பதாக காவல்துறை தெரிவிக்க அதிர்ச்சியில் உறைந்து போகின்றாள் திரிஷா.
சதியாடல்: ஐசக் தென் சென்னை தாதா அயோத்தி வேதாவின் ஒரே மகன். அன்பான மனைவி மகனுடன் வாழ்ந்து வருகின்றார். வேதா. ஒமேகா மருந்து குடோனை தன் கைவசம் வைத்துக்கொள்ள முயற்சிக்கும் அரசியல்வாதிக்கு உறுதுணையாக இருக்கின்றார். வேதா. ஆனால் வண்ணராபேட்டை தாதா ரவிக்கும் அந்த மருந்து நிறுவனத்தின் மீது ஒரு கண். அரசியல்வாதியின் பின் வேதா இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பவன் ரவி. வேதா தன் மகனை நன்கு படிக்க வைத்து தன் தொழிலிருந்து விலகி நல்லவனாக வாழ வேண்டும் என்று பயோடெக் படிக்க வைக்கின்றார்.
திரிஷாவின் அப்பா அயோத்தி வேதாவின் ஆடிட்டர். தன் மகளின் காதலை பிரிக்க தாதாவின் மூலம் பாலாவை தவறானவனாக சித்தரிக்க உதவி செய்தார். பாலாவை கடத்திவந்து கொலை செய்ய முயற்சி செய்யும் போது தப்பபிக்க முயலும் போது வேதாவின் கழுத்தி வெட்டிவிட்டு தப்பி ஓடுகின்றான்.
கழுத்தில் பட்ட காயத்திற்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்கின்றார். அங்கே தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டிருக்கும் திரிஷாவை பார்க்கின்றார். அப்போது திரிஷா பாலா தவறானாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்கின்றாள். அவளைபார்த்துவிட்டு வெளியில் வரும் வேதாவிற்கு அதிர்ச்சி காத்திருக்கின்றது.
ஐசக் அந்த மருத்துவமனையில் வேலைபார்க்கும் மிகவும் நேர்மையான ஜட்ஜ் ராமமுருகேசன் மகள் மனோரஞ்சிதத்தை காதலிப்பதை அறிந்து அதிர்ச்சியாகின்றார் வேதா. மகனின் ஆசையை நிறைவேற்ற ஜட்ஜ் ராமமுருகேசனை பார்க்க செல்கின்றார் வேதா. அப்போது அவரிடம் தன் தொழிலை விட்டுவிடுவதாகவும். தன் மகனுக்கு மனோரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுக்குமாறும் சொல்கின்றார், இர்ண்டு நாளில் முடிவை சொல்வதாக ராமமுருகேசன் சொல்கின்றார்.
தன் வீட்டில் தன்னை சந்திக்க வந்த கவுன்சிலரிடம் தான் இனி அடியாள் வேலையை செய்யப்போவதில்லை என்று சொல்கின்றான். இதை கேள்விபட்ட அமைச்சர் அவனை எண்கவுண்டரில் சுட ஏற்பாடு செய்கின்றார்.
தந்தையின் ஆசைப்படி வெளிநாட்டு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு செல்லும் ஐசக்கிற்கு வேலை உருதியாகும் போது ஒரு தொலைபேசி வருகின்றது. அதில் வேதாவை எண்கவுண்டரில் சுடப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியுடன் வீட்டிற்கு வரும் ஐசக்கிடம் வேதாவின் வலதுகரமான பூமனி அப்ப கொல்லப்படத்தற்கு ராமர் என்ற அடியாள் தான் காரணம் என்று சொல்கின்றான். கோபத்தில் ஐசக் ராமரை கொல்கின்றார்,
தப்பாட்டம்: கந்தா போலிஸ் இண்ஸ்பெக்டர், அவளது சகோதரி வானதி கந்தாவின் நண்பனும் போலிஸ் அதிகாரியுமான யூனுஸை திருமணம் செய்து கொண்டவள். கந்தா மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தில் இருந்து கஷ்டப்பட்டு பதவிக்கு வந்தவன். துணை ஆணையர் சதுர்வேதிக்கு கீழ் வேலை செய்பவன், சதுவேதி கந்தாவின் ஊர்க்காரர் உயர்வகுப்பை சேர்ந்தவர். அவர் ஊரில் அவர் குடும்பத்தில் வேலைக்காரர்களாக பணிபுரிந்தவர்கள் கந்தாவின் குடும்பத்தினர். தங்கள் வீட்டில் வேலை செய்தவர்களின் மகன் பெரிய ஆளாக மாறியிருப்பது சதுர்வேதிக்கு பிடிக்கவில்லை. ரவுடிகளை ஒழிக்க ஏற்பாடு செய்யப்பட்ட குழுவிற்கு சதுர்வேதி கந்தாவை தலைபொறுப்பில் அமர்த்துகின்றார். அந்த எண்கவுண்டரில் அவனை கொலைசெய்ய திட்டமிடுகின்றார்.
கந்தாவின் காதல் மனைவி கண்மனி அனைத்து உயிரையும் நேசிப்பவள் அவளின் அந்த குணமே அவள் மீது கந்தாவிற்கு காதல்வர காரணம். கந்தாவிற்கு உயிர்களை கொல்வது பிடிக்காத ஒன்று. ஆனால் ஓரு உயிரை கொல்ல காவல்துறை பணிக்கின்றது கண்மனி இதை செய்யக்கூடாது என்று பிடிவாதமாக கணவனிடம் சொல்கின்றாள்.
கந்தா தனது நண்பனும் சகோதரியின் கணவனுமான யூனுஸிடம் கலந்து பேசுகின்றான். ஒரு எண்கவுண்டர் சொதப்பிவிட்டது என்றால் காவல்துறையில் மீண்டும் எந்த ஒரு எண்கவுண்டரை அந்த குழுவிற்கு கொடுக்க மாட்டார்கள் அதனால் இந்த எண்கவுண்டரில் அவனை கொல்லாமல் தப்பிக்க விட சொல்கின்றான்.
வேதாவை போடப்பட்ட எண்கவுண்டர் திட்டத்தை செயல்படுத்த கந்தா செல்கின்றான். எண்கவுண்டர் குழுவை வேறு இடத்திற்கு திசை திருப்பிவிட்டு தனியாக வேதாவை சந்திக்கின்றான் கந்தா. வேதாவுடன் பூமனி மற்றும் ராமர் இருக்கின்றனர். வேதாவிடம் நான் காரில் சுட்டுக்கொள்கின்றேன் நீங்கள் தப்பிவிடுங்கள் என்று சொல்கின்றான். பூமனி கார் புதுகார் கன்னா பின்னா என்று சுட்டு சேதமாக வேண்டாம். நானே சுடுகின்றேன் என்று சொல்லி கந்தாவிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி காரில் சுடுவதற்கு பதில் வேதாவை சுடுகின்றான். பின் போன் செய்கிறான் எதிர்முனையில் ஐசக் தன் தந்தையின் இடத்தை பிடிக்க நான் காத்திருக்கும் போது தன்னை வெளிநாடுக்கு சென்று படிக்கவைப்பது தாதா தொழிலை விடுவது பிடிக்காத காரணத்தால் பூமனி மூலம் தந்தையை கொல்கின்றான். அதை பார்த்த ராமரையும் கொல்கின்றான்.
காவல்துறையில் எண்கவுடரை திறம்பட செய்த கந்தாவை பாராட்டுகின்றனர். கந்தாவை கொல்லமுடியாமல் போனதால் சதுர்வேதி கோபத்தில் இருக்கின்றார். கண்மனி கணவனை வெறுக்க தொடங்குகின்றாள். ஆனால் வானதி கந்தா பக்கம் இருக்கு நியாயத்தை சொல்லி கண்மனிக்கு புரியவைக்கும் முயற்சியில் தோற்றுப்போகின்றாள்.
மீண்டும் வண்ணாரபேட்டை ரவியை எண்கவுண்டர் செய்யும் பணியை சதுர்வேதி கந்தாவிடம் ஒப்படைக்கின்றார். அந்த் எண்கவுண்டரில் ஐசக்குடன் கை கோர்த்து கந்தாவை கொல்ல முயற்சிக்கின்றாள். ஆனால் அந்த எண்கவுண்டர் வெற்றிகரமாக நடக்கின்றது, கந்தாவை மறைந்திருந்து கொல்ல முயன்ற ஐசக் அடியாள் பூமனியும் அந்த என் கவுண்டரில் கொல்கின்றான்.
கந்தா மற்றும் யூனுஷ் பேசிக்கொண்டிருக்கும் போது வானதி வெளியே கிளம்புகின்றாள் எங்கே போகின்றாய் என்று யூனுஷ் கேட்க கோபப்படுகின்றாள் பின் சகஜமாகி வெளியே கிளம்புகின்றாள்.
ஒரு மிகப்பெரிய தாதாவை கொலை செய்ய கந்தாவை வரவழைக்கும் சதுர்வேதி இப்போது நேரடியகளத்திலிருந்து கந்தாவை சுடுகின்றார். ஆனால் புல்லட் ஜாக்கெட் போட்டிருந்த கந்தா தப்பித்து எண்கவுண்டரில் ரவுடிகளையும் அவர்களோடு சேர்ந்து சதுர்வேதியையும் சுட்டு கொள்கின்றான்.
பந்தயம்: கிருஷ்ணமூர்த்தி வாழ்கையில் ஏமாற்றுவதையே கலையாக கொண்டு வாழ்ந்து வருபவன். வாழ்கையை பந்தயக்களமாக மாற்றி வாழ்பவன்.
வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று சென்னையில் துணை ஆணையர் சதுர்வேதி வீட்டில் செக்கியுரிட்டியாகவும், தோட்டக்காரனாகவும் மற்றும் மேனஜராகவும் முன்னேறியவன். அப்போது அந்த பங்களாவிற்கு வரும் கலீதை பார்த்து அவனை தான் பணக்காரனாக மாற பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றான்,
மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் ஒரே மகன் கலீத் தன் மகனுக்கு சில கோடி பணத்தை கொடுத்து முன்னேறி காட்டச்சொல்கின்றனர். ஆனால் பணத்தை கலீத் வீணடித்துக்கொண்டு தான் இருக்கின்றான்.
கலீத் ஐ பின் தொடர்ந்து செல்லும் அவன் அதற்காக பெரிய கிளப்புகளில் சேர்வதற்காக ஊரில் உள்ள நிலபுலங்களை விற்று பணத்தை செலவு செய்கின்றான். தான் பெரிய பணக்காரன் என்றும் தன் உறவிணர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சொல்லி நட்பாகின்றான்.
அப்போது சதுர்வேதி வீட்டிலிருந்து சதுர்வேதி மற்றும் வானதியுடன் வெளியேறுகின்றாள். அப்போது வானதி தன் மொபைல் போனை விட்டு செல்கின்றாள். அதை கிருஷ்ண மூர்த்தி எடுத்து அதில் இருக்கும் கணவன்(Husban) எண்ணிற்கு போன் செய்கின்றான். செக் போஸ்ட்டில் பணியில் இருக்கும் கந்தாவிடம் யூனுஸ் தன் போனை கொடுத்துவிட்டு வண்டிகளை ஆய்வு செய்ய செல்கின்றான். கிருஷ்ண மூர்த்தியின் போனை தன் சகோதரியின் போன் என்று எண்ணி பேச முயலும் போதுதான் தன் சகோதரி வானதி மற்றும் சதுர்வேதியின் தொடர்பு தெரிகின்றது. போனை தன்னிடம் கொண்டு வந்து கொடுக்கின்றான். அங்கே வந்த கிருஷ்ண மூர்த்தி போனை கணவனிடம் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போது அவனை அடித்து உதைக்கின்றான். அதில் அடிபட்டு தெருவில் கிடக்கும் கிருஷ்ண மூர்த்தியை கலீத் பார்த்து காரில் கூட்டி கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றான்.
(கந்தா வானதிக்கு அறிவுரை சொல்லி திருத்துகின்றான். எண்கவுண்டரில் சதுர்வேதியையும் கொல்கின்றான்).
மருத்துவமனையில் இருந்து கிருஷ்ண மூர்த்தியை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றான். தன் நண்பனாக அறிமுகப்படுத்துகின்றான் கலீத். கலீதின் தாய் தந்தையிடமும் நற்பெயர் வாங்குகின்றான் கிருஷ்ணமூர்த்தி. அப்போது தான் கலீத் ஏராளமான பணத்தை இழந்தையும் கையில் ஒரு கோடி மட்டும் இருக்கின்றது என்று சொல்கின்றான். கிருஷ்ண மூர்த்தி அந்த ஒரு கோடியை 110 கோடியாக மாற்றி காட்டுவதாக சொல்கின்றான். அந்த ஒரு கோடியை தவறான வழியில் சம்பாதிக்க பயன்படுத்துகின்றான் கிருஷ்ண மூர்த்தி. இதை பற்றி கலீதிற்கு தெரியாமல் இருக்க அவனை எப்பொழுதும் மதுமயக்கத்திலேயே வைத்திருக்கின்றான். 110 கோடி சம்பாதிக்கின்றான். அதை கலீதிடம் சொல்கின்றான். அந்த பணத்தை வைரங்களாக மாற்றி வரிபிரச்சனையிலிருந்து தப்பிக்க வழி செய்கின்றான். அதே நேரம் குடிப்பழக்கம் காரணமாக இதய நோயால் கலீத் இறந்து போகின்றான்.
கலீதை இழந்த அவன் தாய் தந்தை கிருஷ்ண மூர்த்தியை தன் மகனாக தத்தெடுத்துக்கொள்கின்றனர்.
அறம்பற்ற: சுந்தரி கணவனை இழந்து மகனுடன் குப்பத்தில் வாழ்ந்து வருகின்றாள். சத்துணவு கூடத்தில் ஆயாவாக பணியாற்றுகின்றாள். பள்ளி தலைமை ஆசிரியர் ரூ.20000/- பணத்தை பீரோவில் வைக்க சொல்லி சுந்தரியிடம் சொல்கின்றார். சுந்தரியிடம் நிலத்தை வாங்க பட்டணத்திலிருந்து வருகின்றார்கள் அவர்களிடம் நிலத்தை காட்ட சொல்லி சொல்கின்றார்.
நிலத்தில் பீர் தொழிற்சாலை அமைக்க நிலத்தை பார்க்க கிருஷ்ணமூர்த்தி தாய் தந்தையுடன் அங்கே வருகின்றான் சுந்தரி நிலத்தை காட்டுகின்றாள். அப்போது தாகத்திற்காக தண்ணீர் குடிக்க முயலும் போது பாட்டிலில் தண்ணீர் இல்லை. அவன் கார் டிக்கியில் வைத்திருந்த கூல் டிரிங்க்ஸ் குடிக்கின்றான். அங்கே வரும் சுந்தரியின் மகன் மற்றும் மகனின் நண்பர்களுக்கும் கொடுக்கின்றான். இன்னும் கொஞ்சம் கூல் டிரிங்க்ஸ் கேட்கின்றான் சுந்தரியின் மகன் ஆனால் அவனுக்கு மூச்சு முட்டும் நோய் இருப்பதால் சுந்தரி தடுக்கின்றாள். கிருஷ்ண மூர்த்தியின் தந்தை அவரின் தம்பு அபுபெக்கர் பெரிய மருத்துவமனை வைத்துள்ளதாகவும் மகனை அவரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ளவும் தன் பெயரை பயன்படுத்திக்கொள்ளவும் சுந்தரியிடம் சொல்கின்றார்.
வீட்டிற்கு வந்த சுந்தரி மகனுக்கு வயிற்று வலி அதிகமாக மகனை காப்பாற்ற பட்டனத்தில் இருக்கும் அபுபெக்கர் மருத்துவமனைக்கு செல்கின்றாள்.
அதே நேரம் கிருஷ்ணமூர்த்தியும் வயிற்று வலி பிரச்சனையால் அபுபெக்கர் மருத்துமனைக்கு வருகின்றான். ஆனால் அவன் வயிற்று வலிக்கும் கலீத் மரணத்திற்கும் டாக்டர் அபுபெக்கரின் பணத்தாசை காரணம் என்று தெரிகின்றது.
அபுபெக்கர் கிருஷ்ணமூர்த்தியை கொல்ல முயலும் போது சுந்தரி அவனை காப்பாற்றுகின்றாள். ஆனால் அவளை மருத்துவமனையில் தகராறு செய்த காரணத்தை காவல்துறை கைது செய்கின்றது.
அங்கிருக்கு காவல்துறை அதிகாரி நல்லமனதால் விடுவிக்கப்படுவதுடன் அருகில் இருக்கு சிறிய நல்ல மருதுவரிடம் மகனை காண்பிக்க சொல்கின்றார். மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தை வாங்க கடைக்கு செல்லும் சுந்தரியிடம் அந்த மருந்து இங்கே கிடைக்காது எதற்கும் அருகில் இருக்கும் மருந்து குடோனில் கேட்க சொல்கின்றார். ஆனால் அங்கே சில்லறை அளவில் மருந்து தரமாட்டார்கள் என்று சொல்கின்றனர். மீண்டும் டாக்டரி செல்கின்றாள், ஆனால் டாக்டர் தன்னிடம் இருந்த மருந்தை கொண்டு மகனை குணப்படுத்திவிட்டதாக சொல்கின்றார். அதே நேரம் மகனின் நண்பர்களும் இதனால் பாதிக்கப்பட்டதை அறிகின்றாள் சுந்தரி. தன் மகனுக்கு டாக்டர் கொடுத்த டீரிட்மெண்டை தெரிந்து கொண்ட சுந்தரி தன் மகனுடன் சென்று கொண்டிருக்கும் போது கணவன் ஞாபகமாக வைத்திருந்த தாலியை திருடர்கள் பறித்து செல்லும் போது அவர்களிடம் சண்டைபோடுகின்றாள். அந்த வழியே வரும் மருந்து கம்பெனியில் வேலைய்யும் கவுன்சிலர் மகன் காப்பாற்றி மருந்தையும் கொடுத்தனுப்புகின்றான்.
அக்கற: சம்யுத்தன், அமுதினி மற்றும் மூன்று குழந்தைகள், அமுதினியின் தாய் என ஏழ்மையில் வாழ்ந்தாலும் சந்தோஷ்மாக இருப்பவர்கள். சம்யுக்தன் அமுதினி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர் மருந்து கம்பெனி முதலாளி திருமயம் வேலவன்.
நல்லிரவில் வரும் போலிஸ் சம்யுக்தனை கைது செய்கின்றனர். காரணம் சுந்தரியிடம் கொடுத்த போலி மருந்து காரணமாக 9 குழந்தைகள் இறந்து போனதால் அந்த கம்பெனிக்கு பிரச்சனை வருகின்றது. மருந்தை கொடுத்தவன் கவுன்சிலர் தம்பி என்பதால் பிரச்சனையிலிருந்து தப்பிக்க பலியாடாக சம்யுக்தனை மாற்றினர் மருந்து நிறுவனத்தின் நேரடி உரிமையாளர் திருமயம் வேலவன் மற்றும் பினாமிகளான அமைச்சர், கோபுரம் சுந்தரி, அபுபெக்கர் முதலானோர்.
சுந்தரியையும் மிரட்டி பொய்சாட்சி சொல்ல வைக்கின்றனர். நீதி மன்றம் சம்யுக்தனுக்கு தூக்கு தண்டனை விதிக்கின்றது. கணவனை காப்பாற்ற வேண்டி திருமயம் வேலவனை பார்க்க செல்கின்றாள் அமுதினி. அப்போது பாலா சம்யுக்தனிடம் கொடுத்த டாக்குமென் பைலையும் எடுத்து செல்கின்றாள். ஆனால் அந்த டாக்குமெண்ட்டை வாங்கி கொண்டு அவன் கணவனை காப்பற்றுவதாக பொய்சொல்கின்றார். அதை தெரிந்து கேள்வி கேட்ட அமுதினியை அடித்து உதைக்கின்றனர்.
தூக்கு தண்டையில் இருந்த தப்பிக்க முடியாத சூழலில் தூக்கு தண்டனைக்கு தயாராகின்றான் சம்யுக்தன். ஆனால் கடைசில் பாலா சம்யுக்தனிடம் கொடுத்த பைல் உதவியால் தப்பிக்கின்றான்.
பாராட்டுக்குறியது:
வித்தியாசமான ஒரு அடிப்படையில் உருக்கியுள்ள இந்த கதையை சேர்ப்பு அடிப்படையில் ஒரு முழு திரைப்படத்தை பார்க்கும் பிரமிப்பில் உள்ளது. திரைக்கதை அருமை.
ஆறு இசையமைப்பாளர், ஆறு ஒளிப்பதிவாளர், ஆறு படத்தொகுப்பாளர்கள் வேறுபாடு காணமுடியாத வகையில் ஆறுபகுதியை இயக்கியிருக்கின்றார் இயக்குனர்.
ஆறு வெவ்வேறு கதைகளத்தில் பயனிக்கும் கதை ஒரு திருப்புமுனை புள்ளியில் ஒருங்கினைத்து கதை திரைக்கதை உருவாக்கியிருப்பது அருமை.
காமெடியனாக மட்டுமே பார்த்து வந்த பிரேம்ஜியை பாலா என்ற வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.
துணை ஆணையர் சதுர்வேதியாக நடித்திருக்கும் கிருஷ்ணன் பஞ்சு உயர்தட்டு வர்க்க ரீதியிலான அகங்காரத்தை அருமையாக பிரதிபலித்திருக்கின்றார்.
பாசமுள்ள தந்தை வேதாவாக அருமையாக நடித்திருக்கின்றார் சம்பத் ராஜ்
சுந்தரி கதாப்பாத்திரத்தில் விஜயலக்ஷ்மி கதாப்பாத்திரத்திற்கு அருமையாக பொருந்தியுள்ளார்.
நெருடலானவை:
பெரிய அளவுக்கு எதிர்மறையான விஷயங்கள் இல்லையென்றாலும் சில் நுண்னிய விஷயங்களில் கவணம் செலுத்தியிருக்கலாம்.
ஒரு பகுதியுடன் இன்னொரு பகுதி ஒரு புள்ளியில் இணைத்த போது பல பகுதிகளில் பிற பகுதியின் இணைப்பு காட்சிகள் முக்கியத்துவம் இல்லாத போது அதை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக பந்தயம் பகுதியில் ஐசக் கதாப்பாத்திர பகுதி தேவையில்லாத இணைப்பாக தெரிகின்றது.
சதுர்வேதி வானதி தொடர்பு என்ற காட்சியமைப்பு ஏற்புடைய ஒன்றாக இல்லை
கிருஷ்ண மூர்த்தி மேனேஜராக வேலை செய்வது சதுர்வேதி வீட்டிலா, அப்படியென்றால் ஒரு துணை ஆய்வாளர் வீட்டில் மேனேஜர் பதவி என்பதும் சற்று நெருடலான விஷயமாக இருக்கின்றது. அந்த வீட்டிற்கு கலீத் வருவதும் அவரை கிருஷ்ண மூர்த்தி பின் தொடர்வதும் சற்று காட்சி திணிப்பாக தெரிகின்றது.
கிருஷ்ண மூர்த்தி பணத்தை டயமெண்டாக மாற்றும் இடத்தில் நடக்கும் எண்கவுண்டர் அடிப்படை என்ன?
கந்தா மற்றும் கண்மனி எண்கவுண்டர் சார்ந்த கருத்து வேறுபாடு விஷயங்கள் என்ன ஆனது.
சம்யுக்தன் தண்டனையிலிருந்து தப்பிக்க இருந்த கோப்புகளை கொடுத்து விட்டு மீண்டும் திருடி காப்பாற்றுவது போன்ற அடிப்படை கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது.
டாக்டர் அபுபெக்கர் அந்த மருந்து கம்பெனி விவகாரத்தின் உரிமையாளர் பின்னனியில் சேர்த்திருப்பது தேவையில்லாத இடைசெருகலாக இருக்கின்றது. அந்த அடிப்படையில்லாமலும் காட்சியை நிறைவு செய்திருக்கலாம்.
ஒரு விமர்சகன் பார்வையில் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால் ஒரு படைப்பாளன் பார்வை என்பது வேறாக இருக்கும்.
தொகுப்பு:
ஆறு கதைகளங்களை ஒரு புள்ளியில் இணைத்து அதற்கேற்ப திரைக்கதை அமைத்து சுவராஸ்மான ஒரு திரைப்படத்தை பார்க்கும் அடிப்படையில் உருவாக்கியிருப்பது அருமை. ஒரு விமர்சகனாய் பாராட்டுக்குறிய ஒன்றாகவே இந்த படம் இருக்கின்றது. ஆனால் ரசிகனின் பார்வையில் ஏதோ ஒரு விஷயம் குறைவாக இருக்கின்றது. காரணம் ஒரு முழுத்திரைப்படம் என்பது ஒரே நேர்கோட்டிலேயே பார்த்து பழக்கப்பட்ட நம் ரசிப்புத்திறன் புதிய முயற்சிகளுக்கேற்ப மாற மறுப்பதுதான் குறையாக தெரிகின்றது. குறை என்பது திரைப்படத்தில் இல்லை நம் ரசிப்புத்திறனில் தான் என்று உணர்ந்தாலும் மாற மறுக்கின்றது மனம்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.